ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது
x
தினத்தந்தி 17 Oct 2021 8:52 PM GMT (Updated: 17 Oct 2021 8:52 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி அதன் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

7 பேர் விடுதலை

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் தமிழகத்தில் திருச்சி ஆகிய 2 இடங்களில் தான் சிறைச்சாலை உள்ளே ஐ.டி.ஐ. பயிற்சி மையம் உள்ளது. சிறை காவலர்களின் கூடுதல் பணிக்கான தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியல் இன்னும் 3 வாரங்களில் தயாராகி விடும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது. சிறையின் உள்ளே செல்போன் பேசுவதை தவிர்க்க ஜாமர் கருவிகளின் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story