ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு


ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 9:53 PM GMT (Updated: 18 Oct 2021 9:53 PM GMT)

ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது, தலைமை நீதிபதியுடன் சேர்த்து 56 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணிமாறுதலாகி செல்லும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 55 ஆக குறையும்.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளாக சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த 4 புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பின்னர், புதிய நீதிபதிகளை, அட்வகேட் ஜெனரல் மற்றும் வக்கீல் சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேச உள்ளனர். பின்பு புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்து பேசுவார்கள்.


Next Story