கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.
சென்னை,
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி அண்மையில் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரை இன்று தனியாக சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பானது இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல உள்ளனர்.
Related Tags :
Next Story