தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 20 Oct 2021 7:28 AM GMT (Updated: 20 Oct 2021 7:28 AM GMT)

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  வேலூர் ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 24 தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story