தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 Oct 2021 2:25 PM GMT (Updated: 20 Oct 2021 2:25 PM GMT)

தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,948 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,418 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,40,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story