கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை


கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
x
தினத்தந்தி 20 Oct 2021 7:18 PM GMT (Updated: 20 Oct 2021 7:18 PM GMT)

கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.

சென்னை,

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்குக்கு நிவாரணமாக, கேரள மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என தி.மு.க. அறக்கட்டளைத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில் நேரில் சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையையும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அளித்தனர்.

Next Story