நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்
x
தினத்தந்தி 20 Oct 2021 7:22 PM GMT (Updated: 20 Oct 2021 7:22 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கினார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த ஏதுவாக அனைத்து தேவையான முன் நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களையும், தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, பேரூராட்சிகளின் கமிஷனர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் விசு மகாஜன், முதன்மை தேர்தல் அதிகாரிகள் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலட்சுமி (நகராட்சிகள்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story