எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்கம் பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது . இந்நிலையில் இந்த சிகிச்சை தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது .
Related Tags :
Next Story