அரசுப் பேருந்தில் ஏறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
சென்னை கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை,
தியாகராய நகர் - கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா, கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என்று மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு உள்ளது, இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story