சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வம் கருத்து சரியே- ஜே.சி.டி. பிரபாகர்


சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வம் கருத்து சரியே- ஜே.சி.டி. பிரபாகர்
x
தினத்தந்தி 27 Oct 2021 9:03 AM GMT (Updated: 27 Oct 2021 10:53 AM GMT)

அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள் என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ,

சென்னை

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம்  அளித்த பேட்டி ஒன்று அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். என கூறினார் இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். 

 இந்த நிலையில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:- 

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பர் என ஓ.பன்னீர் செல்வம் கூறியது சரியே. அ.தி.மு.கவின் எதிர்காலம் குறித்து சிந்திக்ககூடிய தலைமைக்கழக நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள்.

 தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக் கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என நம்புகிறேன் என கூறினார்.

Next Story