வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம், 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்,
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 26ந்தேதி 19 வயது பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. அந்த சிங்கம் வயது முதிர்வால் உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து நேற்று உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்த சிங்கம் மற்றும் நெருப்பு கோழிகளின் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
Related Tags :
Next Story