மெகா தடுப்பூசி முகாம்: "3 மணி நிலவரப்படி 10.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி"


மெகா தடுப்பூசி முகாம்: 3 மணி நிலவரப்படி 10.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 30 Oct 2021 10:29 AM GMT (Updated: 30 Oct 2021 10:29 AM GMT)

மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 10.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

7-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மெகா தடுப்பூசி முகாம்  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.  இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிற 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலின்படி,  

மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 10.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Next Story