முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9- ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “ தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
142- அடி வரை நீர் தேக்கப்படாமல் கேரளாவின் நிர்பந்தத்தின் காரணமாக நீர் இருப்பை தமிழக அரசு குறைத்துள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story