ஆபாச படம் அனுப்பி கரூர் வங்கி பெண் அதிகாரி கணவரிடம் பணம் பறிப்பு


ஆபாச படம் அனுப்பி கரூர் வங்கி பெண் அதிகாரி கணவரிடம் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 6:18 PM GMT (Updated: 2 Nov 2021 6:18 PM GMT)

ஆபாச படம் அனுப்பி கரூர் வங்கி பெண் அதிகாரியின் கணவரிடம் பணம் பறித்த மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர், 
வங்கி அதிகாரி
கரூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக 27 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கரூர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவரின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து ஒரு பெண்ணின் ஆபாச படம் வந்தது. பின்னர் மர்ம ஆசாமி ஒருவர் எனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு இதேபோல் உனது மனைவியின் ஆபாச படமும் என்னிடம் உள்ளது என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த எனது கணவர் ஆன்லைன் மூலம் ரூ.49 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த ஆசாமி எனது கணவரை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story