தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்


தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2021 11:08 PM GMT (Updated: 8 Nov 2021 11:08 PM GMT)

தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்.

சென்னை,

சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. ரெயில் நிலையங்களிலும், தண்டவாளத்திலும் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று முன்தினம் திடீரென மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக ரெயில் நிலையம் வந்தடைந்தன.

இதைப்போல் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் பணிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் நேற்று மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Next Story