கனமழை எச்சரிக்கை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய தயாராக இருங்கள்
கனமழை எச்சரிக்கை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய தயாராக இருங்கள் தி.மு.க. மகளிர் அணியினருக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள்.
சென்னை,
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 10, 11, 12-ந் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் அணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளைச் செய்ய தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 10, 11, 12-ந் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் அணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளைச் செய்ய தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story