சென்னை-மதுரை சிறப்பு ரெயில் வழக்கம்போல் இயங்கும்


சென்னை-மதுரை சிறப்பு ரெயில் வழக்கம்போல் இயங்கும்
x
தினத்தந்தி 9 Nov 2021 7:54 PM GMT (Updated: 9 Nov 2021 7:54 PM GMT)

சென்னை-மதுரை சிறப்பு ரெயில் வழக்கம்போல் இயங்கும்.

சென்னை,

சென்னை-செங்கல்பட்டு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காரைக்குடி-சென்னை, சென்னை எழும்பூர்-மதுரை, புதுச்சேரி-டெல்லி சிறப்பு ரெயில்கள் இன்று (புதன்கிழமை) எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அன்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேற்கண்ட ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* காரைக்குடி-எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்:02606), எழும்பூர்-மதுரை சிறப்பு ரெயில் (02635), புதுச்சேரி-டெல்லி சிறப்பு ரெயில் (04071) ஆகிய ரெயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் இன்று இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story