16-ந்தேதி வரை யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை


16-ந்தேதி வரை யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2021 12:13 PM GMT (Updated: 12 Nov 2021 12:13 PM GMT)

வரும் 13,14,15,16 -ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால்,   பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வரும் 13,14,15,16 -ஆகிய தேதிகளில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

இந்நிலையில் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.


Next Story