செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. இதை தொடர்ந்து சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை நேற்று மாலை விலக்கப்பட்டது.
இருப்பினும் செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டக்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
கனமழை தொடர்வதாலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை விட்டப்பட்ட நிலையில் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story