தமிழகத்தில் மேலும் 812- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 812- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Nov 2021 2:26 PM GMT (Updated: 12 Nov 2021 2:26 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னை 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 13 ஆயிரத்து 216- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 927- பேர் குணம் அடைந்துள்ளனர். 

தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய  கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து இரண்டாயிரத்து 154- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில்  மேலும் 114- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9,890- ஆக உள்ளது. 


Next Story