தமிழகத்தில் மேலும் 812- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 13 ஆயிரத்து 216- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 927- பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து இரண்டாயிரத்து 154- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 114- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9,890- ஆக உள்ளது.
Related Tags :
Next Story