மழை வெள்ளம்: டெல்டா மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!


மழை வெள்ளம்: டெல்டா மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!
x
தினத்தந்தி 13 Nov 2021 5:03 AM GMT (Updated: 13 Nov 2021 12:04 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை, 

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-வது நாளாக நேற்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தி வருகிறார். இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடச் செல்கிறார்.

இதன்படி கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிடுகிறார். அதன்பிறகு, நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

Next Story