பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்


பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 13 Nov 2021 5:35 PM GMT (Updated: 13 Nov 2021 5:35 PM GMT)

தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்  என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

"கோவையில் தனியார் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம். 

இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அந்தந்த பள்ளி நிர்வாகங்களும் மாணவச்செல்வங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்களைத் தடுப்பதில் முழு அக்கறை காட்டவேண்டும்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story