மணிப்பூர் மாநிலத்தில் 71 பேருக்கு கொரோனா; 334 பேர் டிஸ்சார்ஜ்
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது 537 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிப்பூரில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,24,588 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 334 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,098 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரில் தற்போது 537 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story