அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்- கன மழை எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்


அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்-  கன மழை எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Nov 2021 1:47 PM GMT (Updated: 17 Nov 2021 2:27 PM GMT)

சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் குடிநீர், உணவு, பால் மற்றும் காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 

044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 கனமழை எச்சரிக்கை - தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன .


Next Story