தமிழகத்தில் அம்மா மருந்த‌கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தில் அம்மா மருந்த‌கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 20 Nov 2021 8:05 AM GMT (Updated: 20 Nov 2021 9:47 AM GMT)

மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும் என அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில்

அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும். தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

Next Story