சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தெற்கு அந்தமான கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, வேளச்சேரி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், புழல் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Related Tags :
Next Story