மைல்கல் மீது கார் மோதி 2 அய்யப்ப பக்தர்கள் பலி 4 பேர் படுகாயம்


மைல்கல் மீது கார் மோதி 2 அய்யப்ப பக்தர்கள் பலி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Nov 2021 9:17 PM GMT (Updated: 22 Nov 2021 9:17 PM GMT)

மைல்கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் 2 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபுவின் மகன் ஆனந்த் (வயது 27). இவரும், கொளப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (49), சரவம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (30), மதுராந்தகத்தை சேர்ந்த செல்வமணி (28), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சூர்யா (40) உள்ளிட்ட 5 அய்யப்ப பக்தர்கள் கடந்த சனிக்கிழமையன்று ஒரு காரில் புறப்பட்டு சென்னையில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர்.

காரை செய்யூரை சேர்ந்த டிரைவர் கணேசன்(42) ஓட்டினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன்பேரையூர் பிரிவு சாலையில் அந்த கார் வந்தது.

2 பேர் பலி

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மைல் கல்லின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், காரில் இருந்த ஆனந்த், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கணேசன், லட்சுமணன், செல்வமணி, ரமேஷ் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்கா பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story