10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்


10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:23 PM GMT (Updated: 23 Nov 2021 10:23 PM GMT)

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதனாலேயே அவர்களுக்கான ஜனநாயக உரிமையான விடுதலையை மறுத்துவரும் தி.மு.க.வின் மதவாதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மதத்தினை அளவுகோலாக கொண்டு மானுட உரிமையான விடுதலையை மறுக்கும் போக்கை கைவிட்டு, 10 ஆண்டுகளை கடந்த இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவருக்கும் தண்டனைக்குறைப்பு செய்து, அவர்களை உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக வரும் டிசம்பர் 12-ந்தேதி சென்னையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். விடுதலையை தாமதப்படுத்தும் பட்சத்தில், தமிழகம் முழுக்க மக்களை திரட்டி தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story