அரசு ஆஸ்பத்திரி நர்சு அடித்து கொலை
ஆண்டிப்பட்டியில், தனியாக வசித்து வந்த அரசு ஆஸ்பத்திரி நர்சை மர்ம ஆசாமி அடித்து கொலை செய்தார்.
ஆண்டிப்பட்டி,
திண்டுக்கல் பாரதிபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 46).
இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதற்கு வசதியாக அவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சுரேஷ்-செல்வி தம்பதிக்கு ஹரிகரன் என்ற மகனும், கமலி என்ற மகளும் உள்ளனர். ஹரிகரன், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கமலி, திண்டுக்கல்லில் தனது தந்தையுடன் தங்கியிருந்து அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
செல்போனை எடுக்கவில்லை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ், செல்வியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆண்டிப்பட்டியில் வசிக்கிற தனது உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வியை வீட்டில் போய் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவருடைய உறவினர்கள், செல்வி வசித்த வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் செல்வியின் பெயரை சொல்லி பலமுறை அழைத்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அடித்து கொலை
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு பூஜை அறையில், ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மர்மநபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட செல்வியின் செல்போன் மாயமாகி இருந்தது. அதை துருப்புச்சீட்டாக வைத்து கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பாரதிபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 46).
இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதற்கு வசதியாக அவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சுரேஷ்-செல்வி தம்பதிக்கு ஹரிகரன் என்ற மகனும், கமலி என்ற மகளும் உள்ளனர். ஹரிகரன், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கமலி, திண்டுக்கல்லில் தனது தந்தையுடன் தங்கியிருந்து அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
செல்போனை எடுக்கவில்லை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ், செல்வியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆண்டிப்பட்டியில் வசிக்கிற தனது உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வியை வீட்டில் போய் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவருடைய உறவினர்கள், செல்வி வசித்த வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் செல்வியின் பெயரை சொல்லி பலமுறை அழைத்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அடித்து கொலை
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு பூஜை அறையில், ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மர்மநபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட செல்வியின் செல்போன் மாயமாகி இருந்தது. அதை துருப்புச்சீட்டாக வைத்து கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story