சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Nov 2021 9:05 PM GMT (Updated: 25 Nov 2021 9:05 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.85 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 970 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.85 லட்சம் தங்கம்

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.85 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 970 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைதுசெய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? என இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story