தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 26 Nov 2021 6:08 PM GMT (Updated: 27 Nov 2021 12:30 AM GMT)

தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.



திருவண்ணாமலை,

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

சென்னை உள்பட இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story