வாகனம் மூலம் தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது? சென்னை ஐகோர்ட்டு கேள்வி


வாகனம் மூலம் தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 Nov 2021 12:27 AM GMT (Updated: 27 Nov 2021 12:27 AM GMT)

வாகனம் மூலம் தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.


சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி ரூ.140 விற்கப்பட்ட நிலையில் 50 ரூபாய் குறைந்து நேற்று ரூ.90 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறந்தால் தக்காளி கிலோ ரூ.40 விற்க தயார் என்று, தக்காளி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சாமிநாதன் சென்னை ஐகோரட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் விலை உயர்வை கருத்தில் கொண்டு வாகனம் மூலம் தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டனர். மேலும் இதுகுறித்து 29ந்தேதி விளக்கம் அளிக்குமாறு சி.எம்.டி.ஏ. மற்றும் மார்க்கெட் கமிட்டிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story