மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2021 3:35 PM GMT (Updated: 27 Nov 2021 3:50 PM GMT)

விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நகரின் பல இடங்களில் லேசான மழையே பெய்து கொண்டிருந்தது. மாலை மீண்டும் சென்னையில் பல கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், இன்று பல்வேறு இடங்களில் மழை பாதிப்பு இடங்களை ஆய்வு மேற்கொண்டார். சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் மு.க ஸ்டாலின்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். 


Next Story