கிருஷ்ணகிரியில் பெற்றோர் திட்டியதற்காக அரசு பள்ளி மாணவர் தற்கொலை
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கூப்பசென்னானூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கவியரசு (வயது 17). இவர் குன்னத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவன் கவியரசுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவியரசு பள்ளிக்கு சரவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த மாணவன் கவியரசு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் கவியரசு இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story