பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ


பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ
x
தினத்தந்தி 28 Nov 2021 4:26 PM GMT (Updated: 28 Nov 2021 4:26 PM GMT)

டிச.1ம் தேதி முதல் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்துகிறது ஜியோ நிறுவனம்.

புதுடெல்லி,

இந்தியாவில் செல்போன் சேவை வழங்குவதில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகின்றன. இவர்களுக்கு போட்டியாளர்கள் இவர்கள் மட்டுமே என்பதால் தங்கள் தேவைக்கேற்பே செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்திக் கொள்கின்றன.

இந்தநிலையில்  பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  டிச. 1 ஆம் தேதி முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஏர்டெல், வோடபோன், ஐடியாவை தொடர்ந்து ஜியோவும் அதிரடியாக விலையை உயர்த்தி உள்ளது.  ஜியோ வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Next Story