தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம்


தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம்
x
தினத்தந்தி 29 Nov 2021 12:00 AM GMT (Updated: 29 Nov 2021 12:00 AM GMT)

தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்துக்கு ரூ.2¼ கோடி நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்துநவம்பர் 28-ந்தேதி (நேற்று) வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தொடர் மழையால் இறந்த 59 பேர் குடும்பத்திற்கு ரூ.2 கோடியே 36 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், 2 ஆயிரத்து 943 கால்நடைகள் இறந்ததால் அதற்காக ரூ 3 கோடியே 43 லட்சத்து 71 ஆயிரமும், காயமடைந்த 13 பேருக்கு நிவாரண உதவியாக ரூ.55 ஆயிரத்து 900 மற்றும் மழை வெள்ளத்தால் 24 ஆயிரத்து 810 குடிசைகள் சேதமடைந்தன. அதற்கு இழப்பீடாக ரூ.10 கோடியே 17 லட்சத்து 21 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.15 கோடியே 97 லட்சத்து 47 ஆயிரத்து 900 வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story