தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Nov 2021 1:55 PM GMT (Updated: 30 Nov 2021 1:55 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழக கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 99,795 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை   27,26,917 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 758 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,82,192 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,481 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட 8,244 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story