எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்


எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:59 PM GMT (Updated: 3 Dec 2021 9:59 PM GMT)

எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசுதான் கையில் எடுத்துள்ளது. அதனால் கர்நாடக அரசை சமாதானம் செய்வது மத்திய அரசை பொறுத்தது. எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம். முல்லைப் பெரியாறு அணை 142 அடி எட்டியவுடன் பகல், இரவு என பாராமல் உடனடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தண்ணீர் உயர்வதற்கு வாய்ப்பில்லை.

தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு 100 தடுப்பணைகள் கட்டப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

வெளியேற்றப்படுவார்கள்

நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்தாலும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வீடுகள் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டுதான் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story