பொங்கல் பண்டிகை: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்


பொங்கல் பண்டிகை: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 23 Dec 2021 11:48 PM GMT (Updated: 23 Dec 2021 11:48 PM GMT)

பொங்கல் பண்டிகை: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 06601) இடையே வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி இரவு 9.45 மணிக்கும், நெல்லை-தாம்பரம் (06002) இடையே வருகிற ஜனவரி மாதம் 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* எழும்பூர்-நாகர்கோவில் (06005) இடையே ஜனவரி 13-ந்தேதி மதியம் 3.30 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06006) இடையே வருகிற ஜனவரி 14-ந்தேதி மதியம் 3.10 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* நாகர்கோவில்-தாம்பரம் (06004) இடையே வருகிற ஜனவரி மாதம் 16-ந்தேதி மாலை 4.15 மணிக்கும், மறுமார்க்கமாக தாம்பரம்-நாகர்கோவில் (06003) இடையே ஜனவரி 17-ந்தேதி மதியம் 3.45 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

* நெல்லை-தாம்பரம் (06040) இடையே ஜனவரி 16-ந்தேதி இரவு 7 மணிக்கும், தாம்பரம்-நெல்லை (06039) இடையே ஜனவரி 17-ந்தேதி காலை 10.45 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story