திருமணமாகாமல் கர்ப்பமான கல்லூரி மாணவி: பிறந்த பெண் குழந்தையை காட்டில் வீசிய கொடூரம்...!


திருமணமாகாமல் கர்ப்பமான கல்லூரி மாணவி: பிறந்த பெண் குழந்தையை காட்டில் வீசிய கொடூரம்...!
x

திருமணமாகாமல் கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை, காட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே எசனையில் திருமணமாகாமல் கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து குழந்தையை காட்டில் வீசிவிட்டு மாணவி தனது தாயின் உதவியுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story