தமிழகம், புதுச்சேரியில் 56% அதிக மழை பதிவு


தமிழகம், புதுச்சேரியில் 56% அதிக மழை பதிவு
x
தினத்தந்தி 31 Dec 2021 5:55 AM GMT (Updated: 31 Dec 2021 5:55 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிவு இயல்பை விட 56 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.



சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகளவில் மழை பொழிவு இருக்கும்.  இதன்படி, வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.  நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று தொடர் கனமழை பெய்தது.  இதனால், நகரின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.  அவற்றை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் கனமழையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.  இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 56 சதவீதம் அதிகம் மழை பொழிவு பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.

கடந்த அக்டோபர் 1ந்தேதி முதல் டிசம்பர் 30ந்தேதி (நேற்று) வரை பெய்ய வேண்டிய மழை அளவு 45 செ.மீ. ஆகும்.  ஆனால், 71 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிக அளவாக, விழுப்புரம் மாவட்டத்தில் 119% மழை பதிவாகி உள்ளது.  55 செ.மீ. பெய்ய வேண்டிய நிலையில், 121 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.  இதேபோன்று, சென்னையில் 78 செ.மீ. பெய்ய வேண்டிய மழை, 136 செ.மீ. பெய்துள்ளது.  இது 74% அதிகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story