ஜனவரி 5 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது ; தமிழக அரசு
ஒமைக்ரன் பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
முன்னதாக, 2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று சற்று கடுமையாக்கப்பட்டது. இதையடுத்து, கலைவாணர் அரங்கிலேயே தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது.
Related Tags :
Next Story