தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 2:45 AM GMT (Updated: 2 Jan 2022 2:45 AM GMT)

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென் தமிழக கடற்கரையை ஒட்டி (4.2 முதல் 5.8 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 4-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையை பொறுத்தவரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story