நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்


நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
x
தினத்தந்தி 3 Jan 2022 6:46 PM GMT (Updated: 3 Jan 2022 6:46 PM GMT)

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான ‘சாட்டை’ துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளிவந்துவிடக் கூடாது என்று குண்டர் சட்டம் போட்டுள்ள தி.மு.க. அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சமாகும்.துரைமுருகன் சமூக ஊடகம் மூலம் ஏற்படுத்தும் அளப்பரிய தாக்கத்தைச் சகிக்க முடியாது, சிறை தண்டனை மூலம் அவரை உளவியலாக அச்சுறுத்தி முடக்க நினைக்கும் தி.மு.க. அரசின் கொடுங்கோன்மை போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story