பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்


பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்
x
தினத்தந்தி 6 Jan 2022 10:28 PM GMT (Updated: 6 Jan 2022 10:28 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர். ஆனால் பொருட்களின் தரத்தை பார்த்தபிறகு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புழுவுடன் உள்ள அரிசி, வெல்லம் என்ற பெயரில் பிசின் போன்ற ஒரு பொருளை அடைத்து கொடுக்கப்பட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பரிசு தொகுப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு பதிலாக பண்டிகை கால கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருந்தால் அது பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story