கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:59 PM GMT (Updated: 10 Jan 2022 9:59 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம் முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் அதிவேகமாக ஏறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக குறையும். ஏற்கனவே கொரோனா தொற்றின் முதல் 2 அலைகளில் இருந்து தமிழகம் வெற்றிகரமாக மீண்டெழுந்துள்ளது. அதைப்போல் தற்போது வரும் 3-வது அலையில் இருந்தும் மீண்டெழும்.

தமிழகம் முழுவதும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரம் படுக்கைகள் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பரவி வரும் தொற்றால், பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசால் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் 40 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story