டாஸ்மாக் மதுபான கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை


டாஸ்மாக் மதுபான கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை
x
தினத்தந்தி 11 Jan 2022 2:34 PM GMT (Updated: 11 Jan 2022 2:34 PM GMT)

டாஸ்மாக் மதுபான கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும்.



சென்னை,

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் பரவி வருகின்றன.  தமிழகத்திலும் தினமும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதன்படி, இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன்படி, முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும்.  மதுபான சில்லரை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள்
கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கடைகளில் 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.  ஒரே நேரத்தில் 5 பேருக்கு கூடுதலாக கடையில் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Next Story