பொங்கல் பண்டிகை; மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


பொங்கல் பண்டிகை; மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 13 Jan 2022 12:33 AM GMT (Updated: 13 Jan 2022 12:33 AM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி நாளை (14ந்தேதி) வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் (15ந்தேதி) சனிக்கிழமை மாட்டுப்பொங்கல் அரசு விடுமறை நாள் ஆகும்.

இந்த இரண்டு நாட்களிலும், சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரெயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள், காலை 8 மணியில் இருந்து, மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.




Next Story