திருவள்ளுவர் தினம்: வள்ளுவர்கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


திருவள்ளுவர் தினம்: வள்ளுவர்கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 15 Jan 2022 7:38 AM GMT (Updated: 15 Jan 2022 7:38 AM GMT)

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாட்காட்டியை ஸ்டாலின் வெளியிட்டார்.  திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகத்தையும் வெளியிட்டார் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மேலும் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Next Story