பிரதமர் மோடியை கிண்டல் செய்து டிவி நசைச்சுவை நிகழ்ச்சி - தமிழக பா.ஜ.க கண்டனம்


பிரதமர் மோடியை கிண்டல் செய்து டிவி நசைச்சுவை நிகழ்ச்சி - தமிழக பா.ஜ.க கண்டனம்
x
தினத்தந்தி 17 Jan 2022 9:40 AM GMT (Updated: 17 Jan 2022 9:40 AM GMT)

பிரதமர் மோடியை கிண்டல் செய்து தனியார் டிவி நசைச்சுவை நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை

தமிழகத்தில் இருக்கும் முன்னணி  தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்  ஒன்றில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், பிரதமர் மோடியை கிண்டல் செய்து காட்சி அமைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது சமூக வலைதளங்களில் வைரலானத்தைத் தொடர்ந்து, அந்த நகைச்சுவை காட்சிக்கு பா.ஜ.க.-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல அந்த நகைச்சுவை காட்சி இருப்பதாகவும், இதனால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் தெரிவித்தார்.


இந்நிலையில் மாநில பா.ஜ.க. ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர். அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை சேனல்திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளைஅரசியல்கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.


Next Story